நீங்கள் வைத்த சாதத்தை காகம் சாப்பிடவில்லை அதற்கு என்றால் என்ன அர்த்தம்

காகத்திற்கு சாப்பாடு வைக்கும் பழக்கம் நம்முடைய வீட்டில் தாத்தா, பாட்டிக்கோ, வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ அல்லது நமக்கோ கூட இருக்கலாம். சிலரையெல்லாம் பார்த்திருப்போம் காக்கைக்கு உணவு வைக்காமல் சாப்பிடவே மாட்டார்கள். சிலரோ குறிப்பிட்ட தினங்களில் மட்டும் வைப்பார்கள்.அப்படி வைக்கிற சாதத்தை காக்கை சாப்பிடாமல் போய்விட்டதென்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று இங்கே பார்க்கலாம்.


காக்கைக்கு சிலர் சனிக்கிழமை தோறும் கட்டாயம் சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுவார்கள். சிலர் தினமும் வைப்பார்கள். சிலருக்குச் சாதாரணமாகவே காக்கைக்கு சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். சிலர் பரிகாரங்களுக்காகவும் முன்னோர்களான பித்ருக்களுக்காகவும் சாப்பாடு வைக்கும் பழக்கம் உண்டு.